மின்னல் தாக்கி கணினிகள் கருகின

 

கனகராயன் குளம் மகாவித்தியாலயப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பெரும் மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று முற்பகல் 11.45 மணியளவில் திடீரென இடம் பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து பாடசாலையில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. 

 
இதனையடுத்து அச்சமடைந்த மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்னல் தாக்கத்தால் எவருக்கும் உயிர் பாதிப்பு ஏற்படாத போதும் பாடசாலையிலுள்ள பல கணினிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் என்பன செயலிழந்துள்ளன. அத்துடன் அயலிலுள்ள இலத்திரனியல் சாதனங்களும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.