முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் பாடசாலைகள் மண்டபங்களில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2000ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ந்தும் பாடசாலைகள் பாடசாலைகள்,மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீலம் புயல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களிற்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்படு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக புதுக்குடியிருப்பு முள்ளிவாக்கல் கொக்கிளாய் மற்றும் சிராட்டிக்குளம் ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்த 543 குடும்பங்கள் தொடர்ந்தும் பாடசாலைகள் மற்றும் பொதுநோக்கு மண்டபங்களில் தாங்கவைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் உலர் உணவுகளை அரசசார்பற்ற நிறுவங்கள் வழங்கி வருவதாகவும் அரசால் சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் தொடர்தும் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அக்கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் தொடர்ந்தும் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.