மோட்டார் வண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி

மோட்டார் வண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி

வென்னப்புவ, போலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் வண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (01) இரவு 8.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் 53 வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் போலவத்த பிரதேசத்தில் சிலாபம் - கொழும்பு வீதியை கடப்பதற்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது அவ்வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு, குறித்த பெண்ணும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் வீழ்ந்து காயமடைந்துள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை விபத்தில் சிக்குண்ட பெண் உயிரிழந்துள்ளார்.

மோட்டர் சைக்கிளை செலுத்திச் சென்ற 20 வயதுடைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.