மோட்டார் வாகன தலைக்கவசம் குறித்து இனி பொலிஸார் கூடிய கவனம்

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அணியும் தலைக்கவசம் குறித்து இனி விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். 

1981 21ம் இலக்க மோட்டார் வாகன போக்குவரத்து சட்ட 158 (2) மற்றும் 237 சரத்துக்களில் புதிய ஏற்பாடுகளை தற்போதைய போக்குவரத்து அமைச்சர் சேர்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

அந்த புதிய ஏற்பாடுகளை கடைபிடிக்கும் படி மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த ஏற்பாடுகளை கடைபிடிக்க தவறுவதால் விபத்துக்கள் சம்பவிப்பதாகவும் மேலும் கறுப்பு உள்ளிட்ட வர்ண கண்ணாடி மூலம் முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிவதால் பல குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.