யாழில் எல்லாள மன்னனின் சிலையின் பீடத்தில் "எள்ளாளன்" என்ற தமிழ்க் கொலை

யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நேற்று முன்தினம்(10) நிறுவப்பட்ட எல்லாள மன்னனின் சிலையின் பீடத்தில் "எள்ளாளன்" என்ற தமிழ்க் கொலையுடனேயே பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 
 
எல்லாளன், பண்டாரவன்னியன், பரராசசேகரன் ஆகிய மூன்று தமிழ் மன்னர்களது சிலைகள் நேற்று முன்தினம் அமைச்சர் டக்ளஸால் திறந்து வைக்கப்பட்டன. இதில் எல்லாளனின் சிலைப்பீடத்தில் எல்லாளன் என்பதற்குப் பதிலாக "எள்ளாளன்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் தினமும் எழுந்த வண்ணம் உள்ளன. உடனடியாக இவ்விடயத்துடன் தொடர்புடையவர்கள் நடவடிக்கை எடுப்பது மிக அவசியமான ஒன்றாகும்.