யாழில் காந்தியின் ஜனன தினம்

யாழில் காந்தியின் ஜனன தினம்

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 145ஆவது பிறந்த தினமும் சர்வதேச அகிம்சை தினமும் இன்று பி.ப 4மணிக்கு யாழ்.ஆஸ்பத்திரி வீதியிலுள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.   

சங்கத்; தலைவர் இராசநாயகம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பிரதம விருந்தினராக சிவபூமி அறக்கட்டளையின்  தலைவர்   ஆறு.திருமுருகன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.