யாழில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் சென்ற வாரம் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் தலமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குற்றச் செயல்கள் தொடர்பில் கைதானவர்களின் விபரங்களைக் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 154 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நீதிமன்றத்தினால் விசாரணைக்குச் செல்லாது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன்
அனுமதியின்றி சாராயம் விற்பனை செய்தோர்- 10 பேர்
சந்தேகத்தின் பேரில்- 16பேர்
குடித்து விட்டு கலகம் விளைவித்தவர்கள்- 15&பேர்
அடித்துக் காயப்படுப்படுத்தியமை தொடர்பில் -32 பேர்
வீதிவிபத்து- 5 பேர்
குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள்- 12 பேர்
பொருளை உடைத்து நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில்- 3 பேர்
களவாக மின் இணைப்பை எடுத்துக் கொண்ட குற்றத்தில்- 5பேர்
அத்துமீறி வீட்டில் நுழைந்த குற்றத்திற்காக- 2 பேர்
சூழலை மாசுபடுத்தியவர்கள்- 4பேர்
களவுடன் தொடர்புடையவர்கள்- 4பேர்
சமாதானத்திற்கு குழப்பம் விளைவித்த குற்றத்தில்- 1
என இரண்டு பிரிவிலும் இருந்து 154 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.