யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியா நிலை; சட்டமா அதிபரின் பதில் கிடைக்காமையே காரணம்

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியா நிலை; சட்டமா அதிபரின் பதில் கிடைக்காமையே காரணம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பெரிய, பெரிய குற்றச் செயல்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்து பல மாதங்களாகியும் பதில் கிடைக்கவில்லை. இதனால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது என்று பொலிஸார் கைவிரிக்கின்றனர்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் நடந்த வாராந்த செய்தியாளர் சந்திப்பில் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்றி இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்திய நிபுணர் ந.ஜெயக் குமாரன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. அதன்பின்னர் யாழ். போதனா வைத்திய சாலை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் திருமாறன் வாள்வெட்டுக்கு இலக்கானார்.

"உதயன்' பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் மிகமோசமாகத் தாக்கப்பட்டார். இங்குள்ள ஊடகப் பணியாளர் கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. "உதயன்' பத்திரிகை அலுவலகம் மீது அண் மையில் துப்பாக்கியால் சுட்டும் தீ வைத்துக் கொளுத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விசாரணைகளின் நிலை என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம். ஜெப்றி, ஆரம்ப விசாரணைகளின் பின்னர் அவை தொடர்பான விடயங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து இன்னும் பதில் வரவில்லை.

பதில் கிடைக்கப்பெற்றால்தான் பொலிஸார் மேல் நடவடிக்கை எடுக்கமுடியும். "உதயன்' பத்திரிகை நிறுவனம் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.