யாழ். கந்தர்மடத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ். கந்தர்மடத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ்.கந்தர்மடம் பகுதியில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கந்தர்மடம் மடற்தரை வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை வீட்டின் யன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவர்கள் மடிக்கணினி ஒன்று 5 மோதிரம் 2 சோடி தோடு ஒரு கைத்தொலைபேசி உட்பட பல பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து மேப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

எனினும் சம்பவம் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.