யாழ். தொண்டமனாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்து வருவதாக யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட தொண்டமனாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் கூறுகின்றன.
ஸ்பானிஸ் அரசாங்கத்தின் 200 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் யூனிக்ஸ் நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து தொண்டமனாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.