யாழ் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ நேற்று முன்தினம் மதியம் காணாமல் போனதாக அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ் நகர் பெரியகடை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
அதன் பெறுமதி சுமார் 5 லட்சம் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த ஒருவரின் ஓட்டோவே இவ்வாறு திருட்டுப் போய்யுள்ளது. அது தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.