யாழ் நாவலர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கைக்குழந்தை காயம்! (படங்கள் இணைப்பு)

யாழ் நாவலர் வீதிப்புகதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கைக்குழந்தை ஒன்று காயத்திற்கு உள்ளாகி யாழ் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிலும் மோதிக் கொண்ட விபத்துச் சம்பத்தில் கைக்குழந்தை ஒன்று சிறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விபத்துச் சம்பவம் யாழ்.நாவலர் வீதியில் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.
யாழ்.நவலர் வீதியால் சென்று கொண்டிருந்த கயஸ் வாகனம் மருந்தகம் ஒன்றில் முன்பாக வீதியில் வாகனத்தினை நிறுத்தப்பட்டது.
பின்னால் வாகனம் வருவதை அவதானிக்காத குறித்த கயஸ் வாகனச் சாரத்தி திடீரென வாகனத்தினத் தனது பக்க கதவினை திறந்துள்ளார். இதனால் அவ்வீதியால் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையை மோட்டார் சைக்கிலில் வந்த நபர் வாகனத்தின் கதவுடன் மோதுன்டு விபத்திற்குள்ளாக்கியுள்ளார்.
இதன் போது மோட்டார் சைக்கிலில் இருந்து தாயும் அவரது கைக்குழந்தையும் வீதியில் தூக்கி வீசப்பட்டனர். இதன் போது குறித்த கைக்குழந்தை தலையில் சிறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.