நெல்லியடி மஹாத்மா வீதியில் தனித்துவிடப்பட்ட பார்வை இழந்த வயோதிபரை மனித நேயத்துடன் பெண்மணி ஒருவர் காப்பாற்றி, வயோதிபர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளார்.
நெல்லியடியை சேர்ந்த வேலுப்பிள்ளை கனகசபை(80 வயது) என்ற வயோதிபரே வயோதிபர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டவராவார்.
உறவினர்களால் கொண்டுவரப்பட்ட இவ்வயோதிபர் நடுவீதியில் கைவிடப்பட்டதுடன் உறவினர் தலைமறைவாகினார்கள்.
இந்நிலையில் வீதியால் வந்த பெண்மணி ஒருவர் வயோதிபரின் அவல நிலைக்கண்டு, நெல்லியடி கிராம சேவையாளர் தொடர்பு கொண்டு அவரின் உதவியுடன் வயோதிபரை அழைத்துச் சென்று கைதடி வயோதிபர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.
குறித்த வயோதிபர் தற்போது வயோதிபர் இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றார்.