யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் பனிப்புலம் கலட்டிப் பகுதிய்னைச் சேர்ந்த அற்புதராஜா யோகநாதன் ( வயது 51) என்பவராவார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று நித்திரைக்கு சென்ற நிலையில் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டது என அவரது உறவினர் தெரிவித்தார்.
இச்சடலத்தை மீட்ட இளவாலை காவல் துறையினர் உடற்கூற்று பரிசோதனைக்காக யா.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.