யாழ்.பண்ணைப் பகுதியில் பெண்ணின் புதிய தொழில் முயற்சி ( படம் இணைப்பு )

யாழ்;ப்பாணம் பண்ணைப் பகுதியிலுள்ள மீன்சந்தைப் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பெண்மணி வாகனமொன்றில் இலைக்கஞ்சி, பாயாசம், பால் மற்றும் மரக்கறி சூப் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றார்.
தினமும் ஏராளமானவர்கள் தேடிவந்து தம்மிடம் கஞ்சி, பாயாசம் மற்றும் சூப் வகைகளை விரும்பிவாங்கிப் பருகுவதாகவும், இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அந்தப் பெண்மணி, யாழ்.மாநகரசபையின் அனுமதியுடனேயே தாம் இந்தப் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இதுபோன்ற சத்துணவுப் பான வியாபாரம் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் நடைபெறுமாக இருந்தால் அது இங்கு வாழும் மக்களுக்கு, குறிப்பாக பாடசாலை மாணவர்கள், கல்வி கற்போருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்றும், உடல் ஆரோக்கியத்திற்கு இவை சிறந்தவை என்றும் அந்த இடத்தில் ஆவலாக இலைக்கஞ்சி வாங்கிப் பருகிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

இது ஒரு புதிய வகையான ஒரு தொழில் முயற்சியாக இருப்பதாக குறிப்பிட்ட அவர்,  இதுபோன்ற புதுமையான தொழில் முயற்சிகளின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

 

smooth-slider-copy22013-02-24-11.30.43