யாழ்.பல்கலையில் கைகலப்பு : ஐவர் காயம்

யாழ்.பல்கலையில் கைகலப்பு : ஐவர் காயம்

மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் இன்று (22) ஏற்பட்ட கைகலப்பில் ஐந்து மாணவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பீடத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்விலே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.