யாழ். பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
தனியார் பஸ்ஸொன்றும் சைக்கிளும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சைக்கிளில் பயணித்த வட்டுக்கோட்டை சங்கரத்தையினைச் சேர்ந்த சூசைப்பிள்ளை யாக்கூப் (வயது 56) என்பவரே பலியாகியுள்ளார்.
யாழ். பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பிரதான வீதியின் ஊடாக யாழ்.நகரிற்கு வந்துகொண்டிருந்த பஸ் வண்டியொன்றும் எதிரே வந்த சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
படுகாயமடைந்த வயோதிபர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பயனளிக்காமல் அவர் இன்று மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் பலி
