யாழ். பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான 284 நூல்கள் கையளிப்பு

அமெரிக்காவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ்.பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான 284 நூல்கள் கையளிக்கப்பட்டன. 

இந் நூல்களை த ஏசியன் பவுன்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆர்.மகோர்ஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்.பொதுநூலக சிறுவர் பிரிவில் வைத்து செவ்வாய்க்கிழமை (21) கையளித்தார்.

இந்நிகழ்வில், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட், த ஏசியன் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி டினேசா விக்கிரமநாயக்க, த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் அமெரிக்க பிரதிநிதிகள், யாழ்.பொதுநூலக பிரதம நூலகர் மெல்டா கருணாகரன் மற்றும் பொதுநூலகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.