யாழ். போதனா வைத்தியசாலையில் பகற்களவில் ஈடுபட்ட நபர் ஒருவர் கையும் மெய்யுமாக இன்று பிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் பார்வையாளர் நேரத்தின் போது வைத்தியசாலை வெளிவாயிலில் நோயாளர்களைப் பார்ப்பதற்காக காத்திருந்த ஒருவரின் கைப்பையை அபகரித்த ஒருவரே அங்கு நின்றவர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் குறித்த நபரிடம் இருந்து கைப்பையும் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் கேட்ட போது,
பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த நபர் ஓட்டுமடத்தைச் சேர்ந்தவர் என்றும் பல தடவைகள் வைத்தியசாலையில் இவர் களவில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளார் என்றும் வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.