யாழ். மாவட்டத்தில் இந்த வருட முடிவிற்குள் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுமென யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகஙவியியலாளர்களின் பங்கு எனும் தொனிப் பொருளிலான ஊடக கருத்தரங்கு யாழ் பொது நூலக கேட்போர் கூட்த்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதன் போது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொட்ர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலையே அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதே போன்று இன்னும் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதே வேளையில் பல திட்ட முன்மொழிவுகளும் இருக்கின்றன.
இவ்வாறு ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவிலான அபிவிருத்திகளை அரசாங்கம் முதன்மைப்படுத்தி தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
இதில் பல்வேறு அபிவிருத்திகளும் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதாவது மின்சாரம் ,வீதி ,வீட்டுத்திட்டங்கள், விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட அனைத்துத் துறைசார் அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் மீன்சாரத் தேவையென்பது மிகவும் முக்கியமானதொன்Ùகவே இங்கு காணப்படுகிறது.
இதற்கமைய மீன்சாரம் சார்ந்த பல்வேறு திட்டங்களினூடான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்கள் உள்ளிட்ட சில பிரதேசங்களில் தற்போதும் மின்சாரம் வழங்கப்படாத நிலைமைகள் இருக்கின்றன.
இத்தகைய மீன்சாரத் தேவைகள் தொடர்பாக பொது மக்கள் எமக்கு அறிவித்துள்ளனர். இதற்கமைய இவ்வாÙன இடங்களுக்கும் மீன்சாரம் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 84 வீதமான மக்களுக்கு தற்போது மீன்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மின்சாரம் கிடைக்காத ஏனை மக்களுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் வடக்கின் வசந்திம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களினூடக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனூடாக யாழ்.மாவட்டத்தில் இந்த வருட முடிவிற்குள் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுமென்றும் அதற்கான நடவடிக்கைகள் மிகவும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.