யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் பல்வேறுபட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 190 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.காவல்துறை பிரிவின் கீழ் 110 குற்றவாளிகளும், காங்கேசன்துறை பிரிவின் கீழ் 80 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படித் தகவல் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்.காவல்துறை நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் அதிகபடியாக அடிதடி மற்றும் வாள்வெட்டில் ஈடுபட்ட 33 பேரும், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 27 பேரும், சந்தேகத்தின் பேரில் 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக அந்தந்தப் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.