கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நீதிபதி பொ.சிவகுமார் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவனாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதியாக உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்ற அவர்,
யாழ் நீதிவனாக பதவியேற்ற நீதவான் பொ.சிவகுமார் நீதிமன்றத்தில் எடுத்தக்கொள்ளப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்று முதல் விசாரணை செய்யவுள்ளார். அதன்படி இன்றிய தினம் அவர் முன்னிலையில் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதுவரை காலமும் யாழ் மாவட்ட நீதிமன்ற நீதவனாக கடமையாற்றிய மா.கணேசராஜா தற்சமயம் கொழும்பு மாவட்ட மேலதிக நீதிவானாகவும் அத்துடன் நீதவான் பயிற்சி கல்லுரியில் பயிற்சி பெறவும் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது இடைவெளியினை நிரப்புவதற்காக யாழ் நீதவான் நீதிமன்ற நீதவனாக கிளிநொச்சி மாவட்ட நீதவான் பொ. சிவகுமார் நியமனம் பெற்றுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானாக கல்முனை நீதிமன்ற நீதவான் வகாப்தீன் நியாமிக்கப்பட்டுள்ளளார்.