கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோட்டார்வண்டி மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்தறை, கலிடோஸ் சந்தி புகையிரதப் பாதையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக களுத்தறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் மோட்டார்வண்டியை செலுத்திச் சென்றவர் காயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார்வண்டியில் பயணித்த மற்றொரு நபர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது உயிரிழந்தவர் மொரஹகஹன்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் - மோட்டார்வண்டி மோதுண்டதில் ஒருவர் பலி
