இயக்குனர் லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் கமலை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டாராம் கமல்.
இந்த படத்தை முதலில் கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கட்டும் என்று கமலே ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் பின்னர் அதையும் மாற்றிக் கொண்டாராம்.
ஒரு ஹிந்திப் படத்தின் தழுவலான இந்தப் புதிய படம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிறது. தற்போதைய நிலவரப்படி படத்தின் கதாநாயகன் மற்றும் இயக்குனர் கமல்தான்.
அத்துடன் யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக கமலுடன் கைகோர்க்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.