வடக்கின் இரு போர்களும் ஒத்திவைப்பு

வடக்கில் இன்று நடைபெற்றுகொண்டிருந்த வடக்கின் மாபெரும் போரும் பொன் அணிகளின் போரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், நடுவர் கொடுத்த ஆட்டமிழப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக நடுவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனையத்து அந்த வடக்கின் மாபெரும் போர் இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை, பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருந்த போது ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலியானதையடுத்து அந்த போரும் இடைநிறுத்தப்பட்டது.

இவ்விருபோட்டிகளையும் மீண்டும் நடத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் அம்முயற்சிகள் கைகூடாமையினால் இரண்டுபோட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.