வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்கள் கடலிற்கு செல்வது குறித்து அவதானமாக செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரையான கடற் பகுதிக்குச் செல்லும் மீனவர்கள் காலநிலை குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என அவ் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.