வடக்கு ஆளுநரை சந்தித்தார் ஸ்ரிபன் ராப்

வடக்கு ஆளுனரை அமெரிக்காவின் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரிபன் ராப் நேற்று ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண அபிவிருத்தி முன்னேற்றங்கள் பற்றியும் புதிதாக பதவியேற்ற முதலமைச்சரின்   பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள் பற்றி ஸ்ரிபன் ராப் கேள்வியெழுப்பினார்.