வலி.வடக்கு உயர்பாதுகாப்புப் பகுதியில் படையினரால் வீடுகள் உடைக்கப்படுகின்றன

வலி.வடக்குப் பகுதியான கட்டுவன் பகுதியில படையினரால் வீடுகள் சேதமாக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. இதையடுத்து கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் தர்சானந்

ஆகியோர் அங்கு இன்று மாலை சென்று நிலமையை அவதானித்துள்ளனர்.
இதே வேளை நேற்று வீடு உடைபடுவதாகத் தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற வலி.வடக்குப் பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தனும் படையினரின் செயலை அவதானித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக படையினரைக் கேட்ட போது அவர்கள் பற்றையாக உள்ள இடத்தையே துப்பரவு செய்வதாக சுகிர்தனுக்குத் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணசபையைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றிய பின் படையினரின் நில அபகரப்பு, மற்றும் பிரதேசங்களில் நடமாடும் தன்மை அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.