விவசாய அமைச்சின் மலர்க்கண்காட்சி ஆரம்பம்

விவசாய அமைச்சின் மலர்க்கண்காட்சி ஆரம்பம்
வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க்கண்காட்சி புதன்கிழமை (05) மாலை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. 
 
வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோர் மலர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
 
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் அலங்கார தாவரங்களையும் பயன்தரு மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பிரபல்யமான பண்னையாளர்கள் இக்கண்காட்சியில் தங்கள் உற்பத்திகளை காட்சிப்படுத்தியிருப்பதோடு விற்பனையும் செய்து வருகின்றனர்.
 
இளம் வயதினரை மரநடுகையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. 
 
மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்ச்சியில் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராஜா, மாகாணசபை உறுப்பினர்கள் கே.சயந்தன், விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி, பா.கஜதீபன், இ.ஆனல்ட், மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாய பணிப்பாளர் கி.சிறீபாலசுந்தரம், உதவி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரஞ்சன், மீன்பிடி அமைச்சின் செயளாலர் ஆர்.வரதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 
 
இந்த மலர் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (9) வரை நடைபெறும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.