வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்ட ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில்

1964 ஆம் ஆண்டு ஜப்பானில் ஷின்கன்சென் அதிவேக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஷின்கன்சென் ரயில்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை. இந்த நிலையில் மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

காந்த சக்தியில் இயங்குவதால் அதிவிரைவாக செல்லும் இந்த ரயிலுக்கு சக்கரங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை ஓட்டமாக, டோக்கியோவில் இருந்து நாகோயா என்ற நகருக்கு சென்ற புல்லட் ரயிலில் பயணம் செய்வதால், 40 முதல் 90 நிமிடங்கள் வரை பயண நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

ஏறக்குறைய 64 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த புல்லட் ரயில் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2045 ஆம் ஆண்டு முதல் இதனது பயண தூரம் டோக்கியோவில் இருந்து ஒசாகா வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததால் இந்த புல்லட் ரயில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் பயணிகளின் உபயோகத்திற்காக செயற்படும் என ஜப்பான் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் ஜப்பான் 1964 ஆம் ஆண்டு முதல் முதலாக புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.