வேலணை பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபைத் தலைவர் சிவராசா போல் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ். மாவட்டத்தில் உள்ள தீவகத்திற்கு விசேட ஒதுக்கீடாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலணை பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிதியின் மூலம் 18 அபிவிருத்திப் பணிகள்; வேலணையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வேலணை பிரதேச சபைத் தலைவர் சிவராசா போல் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
