10 கோடிக்கு பயிரிடப்பட்ட கஞ்சா அழிப்பு

சுமார் 10 கோடி ரூபா மதிப்புள்ள கஞ்சா பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

உடவலவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திற்கு அருகில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்துள்ளன. இந்த பயிர்ச் செய்கையை பொலிஸார் அழித்துள்ளனர். 

கடந்த ஏழாம் திகதி தொடக்கம் நேற்று மாலை வரையிலான தேடுதல் நடவடிக்கையின் போது இந்த பிரதேசம் இனங்காணப்பட்டுள்ளது. 

இந்த தேடுதல் நடவடிக்கையில் 180 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.