15 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை அறியாத பெற்றோர்

15 வயதுச் சிறுமி இளைஞனால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள். இதனை அறியாத பெற்றோர் அவளது பிறப்புறுப்பில் இரத்தக் கசிவு ஏற்படப்டதாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 15 வயது நிரம்பிய சிறுமியை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படத்திய 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்தியபிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகரா தெரிவித்தார்.குறித்த சிறுமியை யாருமற்ற வீட ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். சிறுமியின் பால் உறுப்பில் இரத்தக் கசிவு எற்பட்டுள்ளது.இதனால் எதுவும் அறியாத பெற்றோர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்த போது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.பெற்றோரின் முறைப்பாட்டை அடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுள்ளதாக யாழ்.பிராந்தியபிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகரா மேலும் தெரிவித்தார்.