2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும்

2025ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 810 கோடியாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. 

இன்று உலக மக்கள் தொகை 720 கோடியாக இருக்கும் நிலையில், இன்னும் 12 ஆண்டுகளில் அதாவது 2025ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 810 கோடியாகவும், 2050ஆம் ஆண்டு 960 கோடியாகவும் உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் உயராது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்போதிருக்கும் மக்கள் தொகையை விட, 2050ஆம் ஆண்டில், ஆப்ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் தொகை சற்று அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.