பிடியாணையின்றி காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் 48 மணித்தியாலங்கள் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கலாம் என்ற குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளினால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 110 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறீலங்காவில் எந்தா ஒரு சந்தேக நபரினையும் கைதுசெய்து 48 மணி நேரங்கள் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் அதன் பின்னரே நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்படலாம் என்ற சட்டத்தினை சிறீலங்கா அரசு நிவேற்றியுள்ளது.